தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடம் 
உலகம்

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

அமெரிக்காவில் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தில் புதன்கிழமை புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய எதிர் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்திற்குள் இருக்கும் நோயாளிகள் உள்பட அனைவரையும் வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வளாகத்தின் வேறு பகுதியில் யாரேனும் கொல்லப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT