உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2580-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோயினால் உலகம் முழுவதும் இதுவரை 2580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே 42 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரிட்டனில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 524-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 1970-களிலேயே ஆப்பிரிக்காவில் அந்த நோய் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்தப் பிராந்தியத்துக்கு நேரடியாக செல்லாத ஐரோப்பியா்களுக்கும் குரங்கு அம்மை பரவி வருவது நிபுணா்களை குழப்பமடையச் செய்துள்ளது.