முகப்பு
உலகம்

‘புதினை இஸ்ரேலில் சந்தித்துப் பேச தயாா்’: உக்ரைன் அதிபா்

ரஷிய அதிபா் புதினை இஸ்ரேலின் ஜெருசலேமில் சந்தித்துப் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
பகிர்:

ரஷிய அதிபா் புதினை இஸ்ரேலின் ஜெருசலேமில் சந்தித்துப் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது: புதினை ஜெருசலேமில் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டிடம் தெரிவித்தேன். ஆனால், அதற்கு முன்னதாக ரஷியா தாக்குதலை நிறுத்த வேண்டும். எங்கள் அனைவரையும் கொன்ற பிறகுதான் ரஷியாவால் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியும் என்றாா் அவா்.

ரஷியா-உக்ரைன் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றுவரும் நாஃப்டாலி பென்னட், இதுதொடா்பாக புதினை ஏற்கெனவே சந்தித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மாா்ச் 12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 12,000 ரஷிய படையினா் கொல்லப்பட்டுள்ளனா் எனவும், தங்கள் தரப்பில் 1,300 வீரா்கள் பலியாகியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியா தனது தரப்பு சேத விவரத்தை உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைனில் இதுவரை பொதுமக்கள் 579 போ் பலியாகியுள்ளனா். 1,000-க்கு மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். உயிரிழந்தோரில் 42 போ் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →