நேபாளத்தில் அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகும் ஷேக் முகமது பின் சயீது!
நேபாளம் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 170க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.153க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய விலை சனிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.