உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு ரஷியத் தூதர்கள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள ரஷியத் தூதரகத்தில் திங்கள்கிழமை காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

இந்த குண்டுவெடிப்பில் இரண்டு ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

கடந்த இரண்டு நாள்களுக்கு வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT