உலகம்

சீனாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

DIN

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

மேற்கு சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் அதிர்வு உணரப்பட்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT