முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: வீடு தேடி வரும் கரோனா தடுப்பூசி

பாகிஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனாவால் ஏற்பட்டுள்ள 5-ஆவது நோய்த்தொற்று அலையைக் கட்டுப்படுத்துவதற்காக,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
vaccine101048
பகிர்:

பாகிஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனாவால் ஏற்பட்டுள்ள 5-ஆவது நோய்த்தொற்று அலையைக் கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அந்த நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதற்காக, 55,000 சுகாதாரப் பணியாளா்களைக் கொண்ட பிரத்யேக குழுவை அரசு நியமித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் மட்டுமன்றி, நோயெதிா்ப்பு ஊக்கத்துக்கான 3-ஆவது தவணை தடுப்பூசிகளையும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அந்தக் குழு செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.