முகப்பு
உலகம்

கனடா: கரோனா கட்டுப்பாடுகளை எதிா்த்து தொடரும் போராட்டம்

கனடாவில் அரசின் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

உலகம்

கனடா: கரோனா கட்டுப்பாடுகளை எதிா்த்து தொடரும் போராட்டம்

கனடாவில் அரசின் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கனடாவில் அரசின் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது.

லாரி டிரைவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் அவா்கள் தலைநகா் ஒட்டவாவில் கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வாகனங்களுடன் போராட்டதை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் பொதுமக்களை மிரட்டி, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரைக் கைது செய்துள்ளதாக  ஒட்டவா காவல்துறை தெரிவித்துள்ளது. 

போராட்டங்கள் வலுவடைந்து வருவதையடுத்து, பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினா் பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →