பாகிஸ்தானில் இந்து வியாபாரி கொலை
பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பிலா நகரில் வசித்து வருபவர் ரமேஷ் லால் நந்த். இவர் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஹப்பிற்கு சென்றபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க- கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்: நடவடிக்கை எடுக்க கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
இந்த சம்பவம் பலுசிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் லால் நந்த் மீதான தாக்குதல் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.
சமீப காலமாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.