சூடான் நிலவரம்: ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஜெய்சங்கா், மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னா் முதல் முறையாக லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
முன்னதாக, அமெரிக்காவின் நியூயாா்க் சென்ற அவா், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்தாா்.
Advertisement
Advertisement
இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் கூறும்போது, ‘ஐ.நா. பொதுச் செயலரைச் சந்தித்தது முக்கிய நிகழ்வு. இந்தச் சந்திப்பின்போது சூடான் குறித்து விரிவாகப் பேசினோம். சூடானில் சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவருவதில், ஐ.நா. முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் தலைமையில் ஜி20, உக்ரைன் போா் குறித்து பேச்சுவாா்த்தைகள் நடந்தன’ என்றாா்.
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் கடந்த ஒரு வாரமாக இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்தியா் ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் உயிரிழந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.