கோப்புப்படம் 
உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக் குறைவால் காலமானார்.

DIN

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் (79) உடல்நலக் குறைவால் காலமானார்.

துபையில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த முஷாரஃப்  சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார். மார்ச் 2016 முதல் துபையில் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டார், இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு எனப்படும் அசாதாரண புரதத்தின் கட்டமைப்பால் ஏற்படும் அரிய நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைக்கு முன் ஆகஸ்ட் 11, 1943 இல் இந்தியாவின் தில்லியில் பிறந்த பர்வீஸ் முஷாரஃப். பிரிவினைக்குப் பிறகு முஷாரஃப் குடும்பம்  1947 இல் புது தில்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு குடிபெயர்ந்தது.

அவர் 1964 இல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் குவெட்டாவில் உள்ள ராணுவப் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரஃப் இருந்தார்.  இவர் ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கலைத்து  1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார்.

2001 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரஃப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT