உலகம்

துருக்கி நிலநடுக்கத்தில் 96 மணிநேரம் கழித்து மீட்கப்பட்ட இளைஞர்!

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் 96 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

DIN

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் 96 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள் கிழமை (பிப். 6) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துருக்கியின் டோல்காடேரோக்லு பகுதியில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் ஒருவர் 96 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். 

டோல்காடேரோக்லு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் சாச்மா  என்ற 26 வயது இளைஞர் திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளார். தொடர்ந்து நான்கு நாள்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில், இன்று மீட்புப் படையினர், சாச்மாவை உயிருடன் மீட்டனர். 

அவருக்கு அருந்துவதற்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்துநடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT