உலகம்

துருக்கி-சிரியாவில் இருமுறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். 213 பேர் காயமடைந்துள்ளனர்.

DIN

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். 213 பேர் காயமடைந்துள்ளனர்.

6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 47,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன்னா் அதிபயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்க அதிர்வு காரணமாக ஏராளமான கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேறினர். துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டது.

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, பிரான்ஸ், கிரீக், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்! மக்கள் வெளியேற உத்தரவு!

இரண்டாவது திருமணமா? மீனா பதில்!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரை வென்ற வைஷாலி! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

SCROLL FOR NEXT