முகப்பு
உலகம்

டிவிட்டர் பெயர், லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீலக் குருவி பறந்தது

முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது. அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (லோகோ) ‘எக்ஸ்’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை 2023, 12:27 am IST
பகிர்:

முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது. அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (லோகோ) ‘எக்ஸ்’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

நவீன காா்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டரை கடந்த ஆண்டு கையப்படுத்தினாா்.

ஏற்கெனவே, ‘எஸ்க்’ என்ற மாபெரும் சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி வந்த அவா், ட்விட்டரின் பெயரையும், இலச்சினையையும் மாற்றுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள ட்விட்டா் அலுவகத்தில் ‘எக்ஸ்’ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டுள்ளாா்.

தனது ட்விட்டா் கணக்கிலுள்ள தன்னைப் பற்றிய அறிமுகப் பகுதியில், பழைய இலச்சினைக்குப் பதில் புதிய இலச்சினையை பதிவு செய்துள்ள மஸ்க், ஊடகத்தின் பெயரையும் ‘எக்ஸ்.காம்’ என்று மாற்றியுள்ளாா்.

ட்விட்டா் பதிவுகள் அனைத்தும் ‘ட்வீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தன. அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என்று மஸ்க் கூறியுள்ளாா்.

நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த ட்விட்டா் இலச்சினையும், பெயரும் மாற்றப்படுவது குறித்து ஏராளமான சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் தங்களது அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments