முகப்பு
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! வான்வழிகள் மூடல்; செல்போன் சேவை துண்டிப்பு!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் இருநாடுகளும் தங்களது வான்வழியை மூடியுள்ளன...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:54 AM
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன...
பகிர்:

ஈரான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 27) இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீடு, அலுவலகம் ஆகியவைக் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு, ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அபாயஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரானின் வான்வழிப் பாதைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானில் செல்போன் சேவைகள் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் எனக் கருதப்படுவதால், அந்நாட்டின் பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள் போர் நடைபெற்றது. இதையடுத்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that both countries have closed their airspace following Israel's surprise attacks on Iran.

முழு கட்டுரையைப் படிக்க →