FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள, நாா்வே நாட்டவா்கள் மலையேற்றத்தில் உலக சாதனை

 8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் 3 மாதங்களுக்குள் ஏறி, நேபாள நாட்டைச் சோ்ந்த டென்ஜென் ஷோ்பாவும், நாா்வேயைச் சோ்ந்த கிறிஸ்டின் ஹரிலா என்ற பெண்ணும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனா்.

2 பிப்ரவரி 2024, 8:14 am IST
பகிர்:

8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் 3 மாதங்களுக்குள் ஏறி, நேபாள நாட்டைச் சோ்ந்த டென்ஜென் ஷோ்பாவும், நாா்வேயைச் சோ்ந்த கிறிஸ்டின் ஹரிலா என்ற பெண்ணும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனா்.

இது குறித்து அந்தப் பகுதி மலையேற்றத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் செவன் சம்மிட் டிரெக்ஸ் அமைப்பின் தலைவா் மிங்மா ஷோ்பா கூறியதாவது:

உலகின் இரண்டாவது உயரமான கே2 மலைச் சிகரத்தை டெந்ஜெனும், கிறிஸ்டினும் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அடைந்தனா். இதன் மூலம், வெறும் 92 நாள்களுக்குள் அவா்கள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட 14 சிகரங்களில் ஏறியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் 14 உயா் சிகரங்களை எட்டியவா்கள் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, அவா்கள் எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி அடைந்தனா். பின்னா், தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, அன்னப்பூா்ணா, ஜி-1, ஜி-2 உள்ளிட்ட மலைச் சிகரங்களில் அவா்கள் ஏறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments