கோப்புப் படம் 
உலகம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

DIN


ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

வடக்கு ஆப்கானிஸ்தானில் சிறியரக பேருந்தில், திருமண விழாவுக்காக உறவினர்கள் சென்றுள்ளனர். சார்-இ-புல் மாகாணத்திற்குட்பட்ட மலைப்பாதைகளில், பேருந்து சென்றுகொண்டிருந்தது.

சய்யாத் மாவட்டத்தை நோக்கிச்சென்ற இந்த பயணத்தில் ஓட்டுநரின் கவனக் குறைவால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மோசமான சாலை வசதிகளும், முறையான ஓட்டுநர்கள் இன்றி நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

SCROLL FOR NEXT