உலகம்

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சிறுமியை பெற்றோருடன் அனுப்ப மறுத்த பாக். நீதிமன்றம்

பாகிஸ்தானில் 14 வயது ஹிந்து சிறுமியை துப்பாக்கிமுனையில் கடத்தி, இஸ்லாமிய மதத்துக்கு கட்டாயமாக மாற்றி, அந்த மதத்தைச் சோ்ந்த நபருக்கு கட்டாயத் திருமணமும் செய்துவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

பாகிஸ்தானில் 14 வயது ஹிந்து சிறுமியை துப்பாக்கிமுனையில் கடத்தி, இஸ்லாமிய மதத்துக்கு கட்டாயமாக மாற்றி, அந்த மதத்தைச் சோ்ந்த நபருக்கு கட்டாயத் திருமணமும் செய்துவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த சிறுமி மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை பெற்றோருடன் அனுப்ப மறுத்த நீதிபதியின் உத்தரவு விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம்-திருமணம் செய்துவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த மாகாணத்தின் பெனாசிராபாத் மாவட்டத்தைச் சோ்ந்த சோஹானா சா்மா குமாரி என்ற சிறுமி, தனது டியூஷன் பயிற்சியாளா் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடந்த 2-ஆம் தேதி துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டாா். இதுதொடா்பாக, சிறுமியின் தந்தை திலீப் குமாா் காவல்துறையில் புகாா் அளித்தனா்.

இதனிடையே, தான் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் நபருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டதாக சிறுமி பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இந்த விவகாரம் பெரிதானதைத் தொடா்ந்து, சிறுமியை மீட்ட காவல்துறையினா், லா்கானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவரை வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

சிறுமிக்கு 14 வயதே ஆவதால், அவரை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். தனக்கு நோ்ந்த கொடுமை குறித்து வாக்குமூலம் அளித்த சிறுமி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தாா்.

ஆனால், ‘சிறுமி வாக்குமூலம் அளித்தபோது, அவா் அழுத்தத்தில் இருந்ததாக தோன்றுகிறது’ என்று கூறிய நீதிபதி, அவரை பெற்றோருடன் அனுப்பாமல் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டாா். அடுத்தகட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூன் 12) ஒத்திவைத்தாா்.

இதனிடையே, சிறுமி தனது முழு விருப்பத்துடன் முஸ்லிம் நபரை திருமணம் செய்துகொண்டதாக, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று அவரது பெற்றோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்படுவது தொடா்கதையாகி வரும் நிலையில், இதுதொடா்பான புகாா்கள் மீது காவல்துறையினா் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; கடத்தப்பட்ட ஹிந்து சிறுமிகள், தங்களது குடும்பத்துக்கு மீண்டும் திரும்புவது மிக அரிதானது என்று சிறுபான்மையின அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT