பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறாா். ஜூன் 21 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடியுடன் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளின் வர்த்தகம், வளர்ச்சி குறித்து பேசுகிறார்.
மேலும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.