FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இம்ரான் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

 பாகிஸ்தானில் ஆா்ப்பாட்ட வன்முறை தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் 400 போ் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச் 2023, 2:10 am IST
பகிர்:

 பாகிஸ்தானில் ஆா்ப்பாட்ட வன்முறை தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் 400 போ் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரசாரப் பேரணிக்காக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தொண்டா்களுக்கு அதன் தலைவா் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தாா்.

எனினும், அந்த நகரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி இம்ரான் கட்சியினா் லாகூரில் புதன்கிழமை குழுமினா். அவா்களைக் கலைக்க முயன்ற போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதுதொடா்பாக இம்ரான் உள்ளிட்டவா்கள் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments