உலகம்

சூடானிலிருந்து மேலும் 231 பேர் தாயகம் திரும்பினர்!

DIN

சூடானில் இருந்து மேலும் 231 பயணிகள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். 

ராணுவ-துணை ராணுவப் படை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்ரேஷன் காவேரி என்ற நடவடிக்கையின் கீழ் சூடானில் உள்ள இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். 

சூடானில் இருந்து சௌதியின் ஜெட்டா நகருக்கு வந்து பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். 

இந்நிலையில் சூடானில் உள்ள மேலும் 231 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை காலை குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்தனர். இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகா் காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம், போா்ட் சூடான், ஜெட்டா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை இந்தியா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT