ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவரான ஒசாமா அல்-முசைனி இஸ்ரேல் படைத் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை பலியானார்.
காஸாவிலிருந்து இஸ்ரேல் எல்லைக்குள் கடந்த 7-ஆம் தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 1,400 பேரை படுகொலை செய்தனர்.
இதற்கு பதிலடியாக காஸா மீது 11-வது நாளாக இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகின்றது. மேலும், தரை வழியாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே இஸ்ரேலின் மற்றோரு அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா படையினரையும் ஒடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் விமானப் படையின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவரான ஒசாமா அல்-முசைனி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர், ஹமாஸ் படையால் பிணையக் கைதிகளாக பிடித்து வரப்படுவர்களை கையாண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் படையினரை ஒடுக்குவதற்காக காஸா மீது இஸ்ரேல் நடத்தும் கடும் தாக்குதல் 11-வது நாளை எட்டியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.