உலகம்

வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி

DIN

வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பலியாகினர்.

கிஷொர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

விபத்துக்குள்ளான இரு ரயில்களின் பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சம்பவம் பிற்பகல் 3:30 மணியளவில் நடந்தது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சம்பவ இடத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் மீட்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT