முகப்பு
உலகம்

காஸாவில் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் படைகள்

வடக்கு காஸா பகுதிகளில், இஸ்ரேல் படைகள் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் படைகள்
பகிர்:


ரஃபாஹ்: வடக்கு காஸா பகுதிகளில், இஸ்ரேல் படைகள் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டன. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தகர்க்குமாறு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், காஸா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அன்று முதல் இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6,500-ஐக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் தரைப்பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படைகள் தயாராக இருக்கிறது.

இஸ்ரேல் படையின் தரைவழித்தாக்குதலானது, காஸா பகுதியில் எரிபொருள் தீர்ந்துபோகும் தருவாயில் இருப்பதாக ஐ.நா எச்சரித்திருந்த நிலையில் நடத்தப்பட்டுள்ளது. இதனால், காஸா பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை பெரிய அளவில் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதலில், காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. அதேவேளையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டும் வகையில், காஸா பகுதிக்குள் தீவிர தரைவழித் தாக்குதலை நடத்தினால், மிகப்பெரிய அளவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

காஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7000-ஐக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 750 பேர் காஸா பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாகவும், இது அதற்கு முந்தைய நாள் பலியான 704 ஐ விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →