உலகம்

சீனாவில் கனமழை: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

DIN

சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

கடந்த 3 நாள்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப் புயல் சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள புஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில் கோரதாண்டம் ஆடி வருகிறது. 

புயல் காரணமாகவும் கனமழை தொடர்வதாலும் சாலைகள் முழுவதும் காட்டாறுகளாக மாறியுள்ளன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஷென்சென், ஜுஹாய் மற்றும் ஜியாங்மென் நகரங்களிலும், ஃபோஷன், டோங்குவான் மற்றும் குவாங்சோவின் சில பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குவாங்டாங் மாகாண வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT