இஸ்ரேல் - ஹமாஸ் போர்: அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு!
அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 50% பேர் இஸ்ரேல் அத்துமீறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே மூன்று மாதகாலமாக நடந்துவரும் போர் தொடர்பாக பொதுவிவகார ஆராய்ச்சிக்கான அசோசியேட் பிரஸ் - என்ஓஆர்சி மையம் அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அந்தக் கருத்துக்கணிப்பில் 50% அமெரிக்க வயதுவந்தோர், போரில் இஸ்ரேல் அத்துமீறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் எல்லை மீறியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது அமெரிக்காவின் மீத 50% மக்கள் இஸ்ரேல் செய்வது தவறில்லை என நினைப்பதைக் காட்டுகிறது. மேலும், மொத்த வயதுவந்தோரில் 50% பேர் இந்த போர் மத்திய கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என நம்புகின்றனர்.
இதையும் படிக்க: டெஸ்லா கார்களில் பாதுகாப்பு குறைபாடு?
இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்குகூட அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்கள் தினமும் உயிரிழக்கின்றனர்.
இதுவரை 27,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது. அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் எனக் கண்ணீர் விடுகிறது காஸா சுகாதார அமைச்சகம்.