உலகம்

புளோரிடாவில் குடியிருப்பு மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: பலர் உயிரிழப்பு!

DIN

அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, புளோரிடாவின் மொபைல் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. 

பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 என்ற சிறிய ரக விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானி செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசர நிலையை அறிவித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். 

குடியிருப்பின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, விபத்து தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

SCROLL FOR NEXT