முகப்பு
உலகம்

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

துபையில் கனமழையால் விமான சேவை பாதிப்பு: 13 விமானங்கள் ரத்து

Updated On : 2 மே, 2024 at 2:23 PM
கோப்புப் படம்
பகிர்:

துபையில் வியாழக்கிழமை மீண்டும் கனமழை பெய்துள்ளதால் விமான சேவைகள் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபை நேரப்படி அதிகாலை எட்டு மணிக்கு முன்பாக பல்வேறு பகுதிகளில் 50 மிமீக்கு அதிகமாக மழை பெய்தது.

சில மணி நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பிரதான சாலைகள் மற்றும் விமான ஓடுதளங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

5 விமானங்கள் திருப்பப்பட்டுள்ளதாகவும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நேர மாற்றம் குறித்து பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனத்தை அணுகி தெரிந்துகொள்ளுமாறும் விமான நிலையத்தை அணுக கூடுதல் நேரம் அளிப்பதாகவும் மெட்ரோவை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →