முகப்பு
உலகம்

எத்தியோப்பியாவில் நிலநடுக்கம்

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 7 அக்டோபர், 2024 at 11:38 PM
பகிர்:

ஏடிஸ் அபாபா: வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தியோப்பியாவின் அவாஷ் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் தலைநகா் ஏடிஸ் அபாபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டன. இதில் கட்டடங்கள் குலுங்கியதால் அதிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேறினா் (படம்). எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →