ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்  
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலி!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

DIN

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-இல் நடந்த பயங்கர தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | காஸாவின் பின்லேடன்? யார் இந்த யாஹ்யா சின்வார்?

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதை இன்னும் உறுதிபடுத்தவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறந்த 3 பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அப்பகுதியில் உள்ள படைகள் தேவையான எச்சரிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருந்த நிலையில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT