முகப்பு
உலகம்

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம்.

Updated On : 19 அக்டோபர், 2024 at 12:29 AM
விளாதிமீர் புதின்
பகிர்:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைனுடன் பேச ரஷியா தயாராக இருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகளை உக்ரைன் வீணடித்தது.

இந்திய பிரதமா் மோடி ரஷியாவின் நண்பா். போா்ச் சூழல் குறித்த அவரின் அக்கறையை பாராட்டுகிறேன். இதற்கு ரஷியா நன்றிக் கடன்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம். அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும்தான் ரஷியாவை போரில் தள்ளியது. ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பு மறைமுகமாகப் போா் தொடுத்து வருகிறது. உலகில் மிகுந்த திறன்வாய்ந்த, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதாக ரஷிய ராணுவம் விளங்குகிறது. ரஷியாவுக்கு எதிராக போா் தொடுத்து நேட்டோ சோா்ந்துவிடும். இந்தப் போரில் ரஷியா நிச்சயம் வெற்றிபெறும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →