இஸ்ரேல் - ஹமாஸ் போரின் இன்றைய நிலை என்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின் 88-ஆவது நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரின் முடிவு தொடர்பான எந்த தகவலும் கண்ணில் படாத நிலையில் மிகப்பெரும் இழப்பை காஸாவும் பாலஸ்தீன மக்களும் சந்தித்துவருகின்றனர்.
தங்களது உடைமைகள், உரிமைகள் என அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் பல கொடுமைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுவருகிறார்கள். அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லல்பட வைத்திருக்கும் இந்தப் போரின் 88 ஆவது நாளில் நடந்தவை இவை,
இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலால் டெய்ர் எல்-பலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்குக்கரையில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் சோதனையில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பானில் பயணிகள் விமானம் விபத்து: தீப்பிடித்து எரிந்தது!
இஸ்ரேல் சிறையில் மேலுமொரு பாலஸ்தீனக் கைதி உயிரிழந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என பாலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. போர் துவங்கியதிலிருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறையில் இறந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை 207 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாகவும் 338 பேரை காயப்பட்டிருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 21,978 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காஸாவின் சுகாதர அமைச்சகம் கூறுகிறது. அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 4,156 மாணவர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகளை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும் பாலஸ்தீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.