உலகம்

காங்கோ: 33 ஆன மழை - வெள்ள உயிரிழப்பு

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.

Din

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.

இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை வெள்ளம் காரணமாக 23 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மழை வெள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

காங்கோவில் கடந்த வாரம் பெய்யத் தொடங்கிய கனமழையால் அந்த நாட்டின் முக்கிய நதியான இன்ஜிலியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் கின்ஷாசா மற்றும் அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டங்கள் நீரில் மூழ்கின.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT