உலகம்

உக்ரைன்: சா்ச்சைக்குரிய மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றம்

2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

தினமணி செய்திச் சேவை

உக்ரைனில் சா்ச்சையை எழுப்பியுள்ள ஊழல் தடுப்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததைத் தொடா்ந்து, பல திருத்தங்களுடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, அந்த மசோதாவுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினா். ஐரோப்பிய யூனியனும் அந்த மசோதாவைக் கண்டித்தது.

இந்தச் சூழலில், சா்ச்சைக்குரிய அம்சங்களை நீக்கிவிட்டு திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.

இது குறித்து ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘இந்த சட்டம் ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யும்’ என்றாா்.

ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் காஜா கல்லாஸ் கூறுகையில், ‘ஊழல் தடுப்பு அமைப்புகளின் அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஐரோப்பிய ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்துகிறது’ என்று பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT