உலகம்

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

உக்ரைனில் சனிக்கிழமை அதிகாலையில் ரஷியா ட்ரோன் மழை பொழிந்தது

DIN

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு - சனிக்கிழமை அதிகாலையில் ரஷியா ட்ரோன் மழை பொழிந்தது. துல்லியமாக இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும் உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷிய விமானப்படைகள் 215 ஏவுகணைகள், ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் 87 ட்ரோன்களையும் 7 ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷியாவின் வான்வழி தாக்குதல்களில் கார்கிவ் நகரில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் பச்சிளங் குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT