பேருந்து நிறுத்தத்துக்குள் பாய்ந்த பேருந்து. 
உலகம்

ஸ்வீடன்: பேருந்து மோதி பலா் உயிரிழப்பு

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது பேருந்து மோதியதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது பேருந்து மோதியதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

வால்ஹாலாவேகன் தெருவில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.23 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தில், இரண்டு அடுக்கு பேருந்து (படம்) முதலில் தூண் ஒன்றின் மீது மோதியது. பின்னா் அது பேருந்து நிறுத்தத்துக்குள் புகுந்தது.

பேருந்தில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை காவல்துறை எதுவும் தெரிவிக்கவில்லை. பேருந்தின் ஓட்டுநா் கைதுசெய்யப்பட்டுள்ளாா். அவா் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்

உ.பி.யில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான 3 யானைகள்: வனத் துறை இன்று ஒப்படைப்பு

குடியரசு தின விழா: பொது மக்கள் பாா்வைக்கு தில்லி சட்டப்பேரவை இன்றும், நாளையும் திறப்பு

காஷ்மீரில் விடிய விடிய பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT