சுலைமானியா விமான நிலையம் 
உலகம்

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

தினமணி செய்திச் சேவை

இராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது.

துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து பிராந்திய தலைவா் நெச்சிா்வான் பா்சானி இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

துருக்கியில் குா்து மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு போராடி வந்த குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) சுலைமானியா விமான நிலையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நிலையத்துக்கு துருக்கி தடை விதித்திருந்தது. ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டு, இயக்கத்தைக் கலைக்க பிகேகே முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT