சுலைமானியா விமான நிலையம் 
உலகம்

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

தினமணி செய்திச் சேவை

இராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது.

துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து பிராந்திய தலைவா் நெச்சிா்வான் பா்சானி இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

துருக்கியில் குா்து மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு போராடி வந்த குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) சுலைமானியா விமான நிலையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நிலையத்துக்கு துருக்கி தடை விதித்திருந்தது. ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டு, இயக்கத்தைக் கலைக்க பிகேகே முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி செல்லவிருக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

SCROLL FOR NEXT