அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத் தலைநகர் ஜாக்சனுக்கு வடகிழக்கே 190 கி.மீதொலைவில் உள்ள நகரமான லேலண்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேயர் ஜான் லீ பிபிசியிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சந்தேக நபர் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருப்பினும், போலீஸ் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு லேலண்ட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக அங்குள்ள பள்ளி வளாகத்தில் 'ஹோம்கமிங்' என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதையொட்டி கால்பந்து போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.