பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
உலகம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.13) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்கள் மூவருக்கும் வழங்ப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாக நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயலுக்கும்

பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக மற்ற இருவருக்கும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 1896-இல் மறைந்த ஸ்வீடனின் பெரும் பணக்காரரும் டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Nobel Prize in Economic Sciences 2025 announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் - மாரி! கேட்டதும் நடிக்க ஒத்துக்கிட்டேன்! அமீர் | Bison | Audio Launch

நீதி வெல்லும்! தவெக விஜய் கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

கரூர் பலி: எஸ்.ஐ.டி., ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு!

மையுண்ட கண்கள்... ரெபா!

SCROLL FOR NEXT