மெக்சிகோ: 2 புயல்களால் 130 பேர் பலி!
மெக்சிகோவில் பிரிசில்லா, ரேமண்ட் என 2 புயல்களால் 130 பேர் பலியானதாகத் தகவல்
மெக்சிகோவில் புயல், மழை பாதிப்பால் 130 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் புயலால் ஆண்டுதோறும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இந்தாண்டில் பிரிசில்லா, ரேமண்ட் என்ற 2 புயல்கள் ஹிடால்கோ, புபேல்லா, வெராக்ரூஸ் ஆகிய பகுதிகளைத் தாக்கின.
பிரிசில்லா புயலால் கிழக்கு மற்றும் மத்திய மெக்சிகோவின் பல பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளநீர் சூழ்ந்தது. சாலைகளில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளும், பாலங்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதுடன், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்ததால் மின்விநியோகம் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
Advertisement
Advertisement
சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புயல், மழை வெள்ளத்தில் இதுவரையில் சுமார் 130 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!
Mexico floods leave at least 139 dead and 65 missing
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.