முகப்பு
உலகம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்தனர்.

Updated On : 21 செப்டம்பர் 2025, 1:49 am IST
யேமனில் 31 செய்தியாளா்கள் பலி... - ஏபி
பகிர்:

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமன் தலைநகா் சனாவில் நாளிதழ் அலுவலகக் கட்டடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா், 30 செய்தியாளா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸில் நடைபெற்ற செய்தியாளா்கள் படுகொலைக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் இது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments