தாக்குதலில் பலியானோருக்கு பொதுமக்கள் அஞ்சலி ஏபி
உலகம்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்பு

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 36 பேர் பலியான நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவராக 32 வயதான யாசிர் என்பவர் அடையாளம் காணப்படுகிறார்.

மசூதியின் வாயிலில் தன்னைத் தடுத்த பாதுகாப்புப் படையினரைத் தாக்கிவிட்டு, மசூதியின் உள்சென்று, யாசிர் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Islamic State in Pakistan claims responsibility of Islamabad blast

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!

டிஷ் டிவி 3வது காலாண்டு நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரிப்பு!

வரும் தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறாது: தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி!

35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி..! 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு ஆட்ட நாயகன் விருதில்லை!

முன்னேற்றப் பாதையில் இந்தியா - அமெரிக்கா உறவு: ரஷியா என்ன நினைக்கிறது?

SCROLL FOR NEXT