ரஷியா - உக்ரைன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு அமெரிக்கா காலக்கெடு வழங்கியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு வழங்கியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும், ஜூன் மாதத்துக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் தரும் என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, இரு நாட்டு போர் நிறுத்தப் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியும் விதித்தார்.
இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்திருந்த நிலையில், தற்போது ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றுகூறி, வரியை 18 சதவிகிதமாகக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.