ரஷியா - உக்ரைன் போர் (கோப்புப் படம்) AP
உலகம்

ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷியா மற்றும் உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் ஒப்படைத்துள்ளன.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில், களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றன.

இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் ரஷிய அரசு ஒப்படைத்துள்ளதாகவும், அதற்கு நிகராக 35 ரஷிய வீரர்களின் உடல்களை உக்ரைன் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று (பிப். 26) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரில், இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்துடன், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The governments of both countries have handed over the bodies of soldiers killed in the war between Russia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT