FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரஷியா உதவுவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளது பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 8:24 am IST
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி - படம் - ஏஎன்ஐ
பகிர்:

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் தொடர்பான தகவல்களை ஈரானுக்கு ரஷியா வழங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

Advertisement

Advertisement

ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், ”ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து, வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ரஷியா செயற்கைக்கோள் மூலம் தீவிரமாகக் கண்காணிப்பதை நாங்கள் (உக்ரைன்) பதிவு செய்துள்ளோம். இந்தப் படங்கள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான இந்தப் போரில் ஈரானுக்கு ரஷியா உதவி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

summary

Ukrainian President Zelenskyy has accused Russia of providing Iran with information regarding US facilities in Gulf countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments