காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!
அமெரிக்காவின் அழைப்பை ஏற்று காஸா அமைதிக் குழுவில் சேரும் ஐக்கிய அரபு அமீரகம்!
காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அந்தக் குழுவில் சேர ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயன் சம்மதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை(ஜன. 20) தெரிவிகப்பட்டது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு புதிய சா்வதேச அமைப்பாக செயல்படும். இந்தக் குழுவில் சேர இந்தியாவுக்கும் அதேபோல, பாகிஸ்தானுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
UAE President accepts US invitation to the Board of Peace
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.