ஓராண்டு ஆட்சி! குட்டி டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கலிஃபோர்னியா ஆளுநர் கிண்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி குறித்து கலிஃபோர்னியா ஆளுநர் கிண்டல்...
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் டிரம்ப்பை, கிண்டலடிக்கும் விதமாக கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் கேவின் நியூசம் செய்யறிவு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் 2 ஆவது முறை ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஓராண்டில் மட்டும் அவர் விதித்த வரிகள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிபர் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் அனைத்தும் இனம் மற்றும் மதரீதியான பாகுபாடுகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் உள்பட 8 முக்கிய போரை நிறுத்தியுள்ளதாக உரிமைக்கோரும் அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பகிரங்கமாக வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் அதிபர் டிரம்ப்பின் ஓராண்டு ஆட்சியைக் கிண்டலடிக்கும் விதமாக செய்யறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி, கலிஃபோர்னியா ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மிகச் சிறிய குழந்தை உருவத்திலுள்ள அதிபர் டிரம்ப்புக்கு ஆளுநர் நியூசம் அமைதி பரிசு வழங்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு, கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் கலிஃபோர்னியா அமைதி பரிசை வழங்கினார் எனவும் டாடியின் சிறிய உதவியாளருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் எங்களுடன் இணையுங்கள் எனவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
California Governor Gavin Newsom has posted a satirical photo on social media, mocking Donald Trump, who has completed one year in office as the American president.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.