ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்
ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...
அமெரிக்க நைஜீரியப் படைகளின் கூட்டு முயற்சியால் ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்ததாவது:
எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப் படைகளும் இணைந்து உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதியைப் ஒழிப்பதற்காக, சிக்கலான ஒரு பணியைக் குறைபாடின்றி நிறைவேற்றின.
Advertisement
உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலை தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாகலாம் என்று நினைத்தார். ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உளவாளிகள் எங்களுக்குத் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். அது அவருக்குத் தெரியவில்லை.
அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ முடியாது. அவர் கொலை செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு நல்கிய நைஜீரிய அரசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.