ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானுக்கு எதிரான போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதைப் பற்றி...
ஈரானுக்கு எதிரான அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அணுசக்தித் திட்டங்களைக் கைவிட கோரி ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல், உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப். 8 ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இது முடிவு எட்டப்படவில்லை. இதனால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம், ஒப்பந்தம் ஏற்படவிட்டால் அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணைகள் வைத்து தாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
Advertisement
இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் இன்றுடன் (ஏப். 22) முடிவடைந்த நிலையில், மைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.