சம்பளத்தை உயர்த்திய வடிவேலு?

சம்பளத்தை உயர்த்திய வடிவேலு?

நடிகர் வடிவேலு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். 

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக,  நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.

இந்நிலையில், தனக்கான மார்க்கெட் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்ததை உணர்ந்த வடிவேலு தன் சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com